Site icon Tamil News

இலங்கையின் முதல் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் காலமானார்

இலங்கையின் முதல் தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளரான சிரேஷ்ட ஊடகவியலாளர் சுமனா நெல்லம்பிட்டிய காலமானார்

இறக்கும் போது அவருக்கு வயது 80 ஆகும். நீண்ட நாட்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் உயிரிழந்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தனது ஊடக வாழ்க்கையை ஆரம்பிக்கும் முன்னர் விமானப்படை அதிகாரியாக சுமனா நெல்லம்பிட்டிய கடமையாற்றியிருந்தார்.

சுமனா நெல்லம்பிட்டிய 1962ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் திகதி வானொலி நிலையத்தில் உதவி அறிவிப்பாளராக இணைந்துகொண்டார்.

இலங்கை தொலைக்காட்சி வரலாற்றில் முதல் பெண் செய்தி வாசிப்பாளர் சுமனா நெல்லம்பிட்டிய ஆவார்.

அந்த நேரத்தில் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட சுயாதீன தொலைக்காட்சி மற்றும் தேசிய தொலைக்காட்சியில் முதல் செய்தி தொகுப்பாளராகவும் பணியாற்றியிருந்தார்.

இந்நிலையில் அவரின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version