Site icon Tamil News

இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

இஸ்ரேல் எல்லைக்குள் சட்டவிரோதமாக பிரவேசிப்பதை தவிர்க்குமாறு இஸ்ரேலின் சுற்றுப்புற பகுதிகளில் வாழும் இலங்கையர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையில் அதிகரித்து வரும் மோதல் சூழ்நிலை காரணமாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு இதுவரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக SLBFE ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.

மேலும், இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 32 இலங்கையர்கள் தற்போது இஸ்ரேல் சிறையில் உள்ளனர்.

காணாமல் போன இலங்கையர் யாதவர பண்டார தொடர்பில் தற்போது தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version