Site icon Tamil News

இலங்கை வந்த சுவீடன் பிரஜைக்கு நேர்ந்த கதி!

பொத்துவில் பகுதியிலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த சுவீடன் நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.

தனது உணவு மற்றும் பானங்களுக்கு பணம் கொடுக்கவில்லை எனக் கூறி உதைத்து அவர் தடியால் தாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து ஹோட்டலில் பணியாற்றும் இருவரை கைது செய்ய பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாக்குதலுக்கு உள்ளான குறித்த சுற்றுலாப் பயணி, உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பொத்துவில் நெடுஞ்சாலையின் குறுக்கே இரவு வேளையில் ஓடியபோது, காரில் மோதி படுகாயமடைந்து பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலின் போது சுற்றுலாப் பயணியிடம் இருந்த 300 யூரோ மற்றும் கைத்தொலைபேசி என்பவற்றைக் காணவில்லை என முறைப்பாட்டில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version