Site icon Tamil News

காசாவில் இருந்து வெளியேறிய இலங்கையர்கள் – கத்தாருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர்

11 இலங்கையர்கள் உட்பட நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் காசா பகுதியிலிருந்து எகிப்திற்குள் நுழைய அனுமதித்த ரஃபா எல்லைக் கடவை திறப்பதில் கத்தார் ஆற்றிய ஆக்கபூர்வமான பங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பாராட்டினார்.

ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், கத்தார் அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள கத்தார் தூதரகத்தின் பொறுப்பதிகாரி அலி ஹசன் அலெமதியுடனான சந்திப்பின் போது, வெளிவிவகார அமைச்சர் இது தொடர்பில் இலங்கையின் பாராட்டுக்களை தெரிவித்தார்.

நவம்பர் 5, 2023 அன்று 11 இலங்கையர்களை கொழும்பிற்கு வருவதற்கு வசதியாக, சம்பந்தப்பட்ட இலங்கை தூதரகங்கள், அமைச்சுகள் மற்றும் முகவர் நிறுவனங்களுடன் ஒருங்கிணைத்ததையிட்டு வெளிவிவகார அமைச்சு மகிழ்ச்சியடைகிறது என்று இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version