Tamil News

குவைத்தில் உயிரிழந்த இலங்கைப் பெண்! வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள கோரிக்கை

இலங்கைப் பெண் ஒருவர் குவைத்தில் உயிரிழந்துள்ளதாக இலங்கைத் தூதரகம் வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவுக்கு அறிவித்துள்ளது.

66 வயதுடைய குலசிங்க ஆராச்சியைச் சேர்ந்த அனுலா பிரிதிமாலி பெரேரா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் இலக்கம் 438/1, நுகவத்தை வீதி, கிரிவத்துடுவ என்ற முகவரியில் வசிப்பதாக குடிவரவுத் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரின் இறுதிக் கிரியைகளை மேற்கொள்ள நெருங்கிய உறவினரோ அல்லது அவருக்குத் தெரிந்தவர்களோ இருந்தால் விரைவில் தெரிவிக்குமாறு வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி புகைப்படத்தில் உள்ள பெண்ணை யாரேனும் அறிந்தால், அமைச்சின் தொலைபேசி இலக்கம்: 011 -238836/ 011 -7711163/ 011- 2323015, மின்னஞ்சல்: consular@mfa.gov.lk அல்லது தூதரகப் பிரிவு, வெளிவிவகார அமைச்சு, 2 ஆவது மாடி, செலிங்கோ கட்டிடம் கொழும்பு 01. வெளிவிவகார அமைச்சுக்கு அறிவிக்குமாறு தெரிவித்துள்ளது.

Exit mobile version