Site icon Tamil News

உலக சிறுவர் சமாதான மாநாட்டில் சிறந்த உரைக்கான விருதை வென்ற இலங்கை மாணவி

உலக சிறுவர் அமைதி மாநாட்டில் சமாதானம் தொடர்பான சிறந்த உரைக்கான விருதை வென்ற ஆர்.எஸ்.கஸ்மிரா ஜயவீர நாட்டிற்கு வந்துள்ளார்.

ஜப்பானின் டோக்கியோவில் கடந்த 1ஆம் திகதி நடைபெற்ற 04ஆவது உலக சிறுவர் சமாதான மாநாட்டில் இவ்விருதை அவர் பெற்றுக்கொண்டார்.

அந்த மாநாட்டில் இலங்கையர் ஒருவர் கலந்து கொண்டதும் இதுவே முதல் முறை.

வயங்கொட பண்டாரநாயக்க மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் ஆர்.எஸ்.கஸ்மிரா ஜயவீர, உலக அமைதியை நிலைநாட்ட கல்வி மற்றும் மொழிக்கல்வி மூலம் எவ்வாறு குழந்தை தலைமைத்துவத்தை மேற்கொள்ள முடியும் என விளக்கமளித்துள்ளார்.

Exit mobile version