Site icon Tamil News

இலங்கை ஜனாதிபதி தேர்தல் : வாக்களிப்பு நேரம் தொடர்பில் வெளியான அதி விசேட வர்த்தமானி!

வாக்களிப்பு நேரத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக விசேட வர்த்தமானி அறிவித்தலை இலங்கை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

1981ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல் சட்டத்துக்கமைய மாலை 4 மணிவரை வாக்களிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாலை 4 மணியாகும்போது வாக்கெடுப்பு நிலையத்தில் வரிசை அல்லது வரிசைகளில் நிற்கின்ற அனைத்து வாக்காளர்களுக்கும்  வாக்குச்சீட்டு வழங்கப்படும் வரையில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என அதிவிசேட வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version