Site icon Tamil News

இலங்கை ஜனாதிபதி தேர்தல் – மூடிய அறையில் மீண்டும் சந்தித்த ரணில் – மஹிந்த

இலங்கை ஜனாதிபதி தேர்தல் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பு – விஜேராமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நேற்று இரவு 7 மணிக்கு இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருவருக்கும் இடையிலான இந்தச் சந்திப்பு மூடிய அறைச் சந்திப்பாக அமைந்திருந்தாக கூறப்படுகிறது.

சுமார் 1 மணி நேரம் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக மஹிந்த ராஜபக்ஷவுக்கு நெருக்கமான தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version