Site icon Tamil News

இலங்கை ஜனாதிபதி தேர்தல் – ரணிலின் பிரச்சார மேடையில் மஹிந்தவை புகழ்ந்து பேசிய உறுப்பினர்

மஹிந்த ராஜபக்ச மக்களின் துன்பங்களை முடிவுக்கு கொண்டு வந்த மகிழ்ச்சியை தந்த தலைவர் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மேடையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜகா விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மாவனெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியின் பேரணியின் மேடையில் உரையாற்றிய அவர், ரணிலின் பெயருக்கு பதிலாக மகிந்தவின் பெயரை கூறியுள்ளார்.

எனினும் சிறிது நேரத்தை பிழையை திருத்திக் கொண்ட அதனை ரணில் விக்ரமசிங்க என மாற்றிக் கொண்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவான அவர், இந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக ஒன்றிணைந்துள்ளார்.

Exit mobile version