Tamil News

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: கட்டுப்பணம் செலுத்திய 36 வேட்பாளர்கள்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மொத்தம் 36 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 19 வேட்பாளர்களும், மற்றொரு அரசியல் கட்சியின் வேட்பாளர் ஒருவரும், அந்தந்த பிரதிநிதிகளால் பரிந்துரைக்கப்பட்ட 16 சுயேச்சை வேட்பாளர்களும் அடங்குவர்.

இன்று கையளிக்கப்பட்ட வேட்புமனுக்களில் சமபிம கட்சியைச் சேர்ந்த நாமல் ராஜபக்ஷ என்ற மற்றொரு வேட்பாளரும் உள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை தனது கட்டுப்பணத்தை செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்துவதற்கான காலம் நாளை (14) நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது நாளை மறுதினம் (15) காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை ஆரம்பமாகவுள்ளது.

வேட்புமனு ஏற்றுக்கொள்ளும் தினத்தன்று இராஜகிரியவில் உள்ள தேர்தல் செயலகத்தில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்

Exit mobile version