Site icon Tamil News

சிக்கிம் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரிப்பு!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 53 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 140 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 6,000க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் இடம்பெயர்ந்துள்ளதாகவும்,  25,000க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் 1,173 வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக சிக்கிம் மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஒரு நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதையடுத்து, டீஸ்டா ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததால் சிக்கிம் மாநிலத்தில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version