Site icon Tamil News

பங்களாதேஷ் பிரதமருடன் இலங்கை ஜனாதிபதி சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கும் இடையிலான சந்திப்பொன்று ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் இரு தரப்புக்கும் இடையில் ஆக்கபூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 78வது கூட்டத்தொடர் அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் இன்று ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version