Site icon Tamil News

இலங்கை குடிவரவு, குடியகழ்வு திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!

குடிவரவு குடியகழ்வு திணைக்களம் மக்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஆன்லைன் விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது http://www.immigration gov.lk இணையதளத்தில் உள்ள e visa இணைப்பை மட்டும் பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

http://www.srilankaevisa.lk போன்ற போலி இணையத்தளங்களுக்கு சென்று பணம் செலுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி முதல் குடிவரவுத் திணைக்களத்தில் புதிய வீசா முறை மற்றும் புதிய ஆன்லைன் முறைமை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக திணைக்களம் தனது அறிவிப்பில் மேலும் தெரிவித்துள்ளது.

Exit mobile version