Tamil News

ஸ்ரீ பாத மலையில் மூன்று மாதங்களில் மூன்று டன் பிளாஸ்டிக் போத்தலிகள் சேகரிப்பு

ஸ்ரீ பாத யாத்திரைக்கு வருகை தந்த யாத்ரீகர்களால் தூக்கி எறியப்பட்ட மூன்று தொன் பிளாஸ்டிக் போத்தல்கள் இவ்வருடம் ஸ்ரீ பாத பருவம் ஆரம்பித்து மூன்று மாதங்களுக்குள் சேகரிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பிரதேச சபை அறிவித்துள்ளது.

அவ்வழியாக பயணிக்கும் பக்தர்கள் எடுத்துச் செல்லும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை அப்புறப்படுத்த குப்பைத் தொட்டிகள் பொருத்தப்பட்டுள்ளதாக மஸ்கெலிய பிரதேச சபையின் செயலாளர் எஸ்.ராஜவீரன் தெரிவித்தார்.

இருப்பினும், சில யாத்ரீகர்கள் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை குப்பைத் தொட்டிகளில் போடாமல் சுற்றுச்சூழலில் வீசுகிறார்கள்.

ஸ்ரீ பாத யாத்ரீகர்களால் தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்கள் நல்லதண்ணியில் உள்ள குப்பை மறுசுழற்சி நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து தனியாருக்கு விற்கப்படும் என செயலாளர் தெரிவித்தார்.

இதேவேளை, தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நல்லதண்ணி பிரதேசத்தில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண நீர் வழங்கல் சபையுடன் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக செயலாளர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version