Site icon Tamil News

இலங்கை – கொழும்பின் பல பகுதிகளில் நீர் விநியோக தடை!

கொழும்பின் பல பகுதிகளில் நாளை (24.11) நீர்வெட்டு தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இது கொழும்பின் 11, 12, 13, 14, மற்றும் 15 ஆகிய பகுதிகளில் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மாலை 5.00 மணி முதல் வரும் 25 காலை 9.00 மணி வரை 16 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

அம்பத்தலே நீர் விநியோக மேம்பாட்டுத் திட்டத்தின் பராமரிப்புப் பணிகள் காரணமாகவே இந்த நீர்வெட்டு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Exit mobile version