பாராளுமன்றம் இன்றிரவு கலைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக புதிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கலாநிதி ஹரிணி அமரசூரிய இலங்கையின் 16வது பிரதமராக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் பதவிக்கு மேலதிகமாக அவருக்கு நீதி,கல்வி, விஞ்ஞானம், தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் முதலீட்டு அமைச்சராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.