Site icon Tamil News

இலங்கை – கிண்ணியா கடற்கரையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்..!

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோனா கடற்கரையில், பெண்ணின் சடலமொன்று இன்று(18) காலை மீட்கப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் கிண்ணியா அஹமட் லேன் வீதியைச் சேர்ந்த 33 வயதான பெண் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண் புத்தி சுவாதீனமற்றவர் எனவும் கடலில் குளிப்பதற்காக இன்று(18) காலை கடலில் இறங்கியதால் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரனை மூலம் தெரியவருகிறது.

பெண்ணின் சடலத்தை விசாரனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Exit mobile version