Site icon Tamil News

இலங்கை சந்தைகளில் தேங்காய் எண்ணெய் விலை திடீரென அதிகரிப்பு!

சந்தையில் தேங்காய் எண்ணெய் போத்தல் ஒன்றின் விலை 150 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் தங்களுடைய இருப்புக்களை மறைத்து வைத்திருப்பதன் காரணமாகவே தேங்காய் எண்ணெய் விலை அதிகரித்துள்ளதாக பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

தேங்காய் எண்ணெய் போத்தல் ஒன்றின் விலை 150 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் மற்றும் மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் இஷ்டத்திற்கு எண்ணையின் விலையை தீர்மானித்துள்ளதாகவும், ஒரு போத்தல் ஒன்றின் விலையை அதிகரிக்கச் செய்யும் போக்கு காணப்படுவதாகவும் அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கத்தின் அழைப்பாளர் புத்திக டி சில்வா தெரிவித்தார். எதிர்காலத்தில் 1,000 ரூபாய் வரை உயரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version