Site icon Tamil News

இலங்கை – வீசா இன்றி தங்கியிருந்த ஒரு பெண் உட்பட ஆறு சீன பிரஜைகள் கைது!

வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த 6 சீன பிரஜைகள் பயாகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடிவரவு நிபந்தனைகளை மீறி பயாகல பிரதேசத்தில் தங்கியிருந்த சீன பிரஜைகள் நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 5 ஆண்களும் ஒரு பெண்ணும் இருந்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20, 22, 24, 27, 39 வயதுடையவர்கள் எனவும் பெண் சந்தேகநபர் 48 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version