Site icon Tamil News

இலங்கையில் வீடொன்றில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இளம் தாய் மரணம்

ஹிகுராக்கொட நெல்லி வீதியில் வீடொன்றில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் 23 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரு பிள்ளையின் தாயான ரசிகா சாமோதனி என்பவரே உயிரிழந்துள்ளார்.

மேலும் இருவர் காயமடைந்து பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரு வயதுடைய மகளும் அவரது கணவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கனமழையின் போது களிமண் சுவர் இடிந்து விழுந்ததில் அவர் உயிரிழந்தார்.

Exit mobile version