Site icon Tamil News

இலங்கை: சூடுபிடிக்கும் ஜனாதிபதித் தேர்தல்! சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவாரென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தேர்தலை மிகக் குறுகிய காலத்திற்குள் நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவைக் கோரியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் , எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க அதிக வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தேர்தல் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தவுடன் விக்ரமசிங்க தாம் போட்டியிடுவதாக உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

தேர்தலில் தமக்கு ஆதரவளிக்குமாறு ஜனாதிபதி அண்மையில் சமகி ஜன பலவேகய மற்றும் தேசிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

Exit mobile version