Site icon Tamil News

இலங்கை : மேல் மாகாண மக்களுக்கான அறிவிப்பு

போக்குவரத்து அபராதம் செலுத்துவதற்காக மேல் மாகாணத்தில் உள்ள பல தபால் நிலையங்கள் 24 மணிநேரமும் திறந்திருக்கும் என பிரதி தபால் மா அதிபர் பொலிஸ் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவுக்கு அறிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸாரினால் வழங்கப்படும் தண்டப்பணம் செலுத்துதல் மற்றும் ஏனைய தபால் நடவடிக்கைகளுக்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, பொரளை, வெள்ளவத்தை, ஹெவ்லொக் டவுன், தெஹிவளை, மொரட்டுவ, பாணந்துறை, களுத்துறை, கொட்டாஞ்சேனை, கொம்பன்னவீதிய, பத்தரமுல்ல, கல்கிசை, நுகேகொட மற்றும் சீதாவகபுர ஆகிய தபால் நிலையங்கள் 24 மணிநேரமும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Exit mobile version