Site icon Tamil News

இலங்கை – 6 பாடசாலை மாணவர்களை மீது மோதி விபத்தை ஏற்படுத்திய லொறி!

கண்டி நோக்கிச் சென்ற லொறி ஒன்று வீதியின் எதிர் திசைக்கு திரும்ப முற்பட்ட போது நுகவெல பாடசாலைச் சந்தியில் வீதியில் பயணித்த சிலர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து நேற்று (03) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.

விபத்தில், நான்கு பாடசாலை மாணவிகள், இரண்டு மாணவர்கள், இரண்டு பெண்கள் மற்றும் ஆண் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அலதெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version