இலங்கையில் சுற்றிவளைப்புகளுக்கு இன்று முதல் இராணுவத்தினரின் ஆதரவைப் பெறுவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது
அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களாக பொலிஸார் யுக்திய நடவடிக்கையில் பல்லாயிரம் கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.