Site icon Tamil News

இலங்கை: மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

ஆறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலி மாத்தறை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.

குறித்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நாளை மாலை 4 மணிவரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version