Site icon Tamil News

இலங்கை – யாழ்ப்பாணத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் மீண்டும் துவங்கும் விமான சேவை!

இந்தியாவின் முக்கிய விமான நிறுவனமான இண்டிகோ, செப்டம்பர் 1 முதல் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே விமானச் சேவையைத் தொடங்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தற்போது, ​​இந்தியாவின் அலையன்ஸ் ஏர் யாழ்ப்பாணத்திற்கு தினசரி விமானத்தை இயக்குகிறது,

இலங்கைக்கும் தென்னிந்தியாவிற்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்தும் நடவடிக்கையில் இந்திய வெளிவிவகார அமைச்சின் சாத்தியமான நிதியுதவியுடன் விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் உள்ள தகவலறிந்த ஆதாரத்தின்படி, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் தற்போது உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் யாழ்ப்பாணத்திற்கு அருகிலுள்ள காங்கேசன்துறைக்கும் (கேகேஎஸ்) பயணிகள் படகு சேவையும் சமீபத்தில் மீண்டும் இயக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version