Site icon Tamil News

ஐவரை பலியெடுத்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம்!!! விசாரணையில் களமிறங்கிய விசேட குழு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் ஐந்து பேர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளுக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விசாரணைகளுக்காக ஏற்கனவே 06 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்தார்.

இதன்படி, எதிர்கால விசாரணைகளை பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் முன்னெடுப்பார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பான கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியஅத்த நுழைவாயிலுக்கு அருகில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட ஐவர் உயிரிழந்துள்ளனர்.

Exit mobile version