Site icon Tamil News

இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் விநியோகிக்க முடியாத நெருக்கடி நிலை

இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் செயற்பாடுகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க அது தொடர்பில் தெரிவிக்கையில்,

மேற்படி சாரதி அனுமதிப் பத்திரம் அச்சிடும் அட்டைகள் இல்லாத காரணத்தாலேயே சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு சுமார் ஐந்து இலட்சம் சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்க முடியாத நிலை காணப்படுவதாக தெரிவித்த அவர், இந்த தாமதம் காரணமாக சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்க மேலும் இரண்டு மாத காலங்கள் எடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version