Site icon Tamil News

IT தொழில்நுட்ப சிக்கலால் இலங்கைக்கும் பாதிப்பு : வெளியான அறிக்கை!

அமெரிக்காவில் இணைய பாதுகாப்பு அமைப்புகளை வழங்கும் அமைப்பின் மென்பொருளில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிழையால் நாடு பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய 40 அரசு தகவல் அமைப்புகள் தொடர்பாக அறிக்கைகள் கோரப்பட்டுள்ளன.

மைக்ரோசாப்ட் அப்ளிகேஷன்களை அடிப்படையாக கொண்டு தகவல் அமைப்புகள் இயங்குகின்றனவா என்பதை கண்டறிய இந்த அறிக்கைகள் அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றத்தின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர்  சாருக தமுனோபொல தெரிவித்தார்.

மேலும், 4 தனியார் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரப்பூர்வமற்ற தகவல்களின்படி, இரண்டு வங்கிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் தம்மிடம் கடுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர்  குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் சைபர் பாதுகாப்பு அமைப்புகளை வழங்கும் நிறுவனமான Crowdstrike என்ற Falcon மென்பொருளில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிழை காரணமாக, உலகின் பல நாடுகளில் உள்ள வங்கிகள், விமான நிலையங்கள் மற்றும் பிற நிறுவனங்களின் செயல்பாடுகள் இன்று (19.07) கடுமையாக பாதிக்கப்பட்டன.

Exit mobile version