Site icon Tamil News

பிரான்ஸில் உறங்கிக் கொண்டிருந்த சிறுவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

பிரான்ஸில் இடம்பெற்ற தீ விபத்து ஒன்றில் 7 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்த தீ விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மார்செய் மாவட்டத்தின் 15 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் அதிகாலை 4.30 மணி அளவில் இடம்பெற்றது.

குடியிருப்பு வளாகத்தில் உள்ள கட்டிடம் ஒன்றின் இரண்டாவது தளத்தில் திடீரென பரவிய தீயினால், உறங்கிக்கொண்டிருந்த பலர் காயமடைந்தனர். தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இச்சம்பவத்தில் 7 வயதுடைய ஒருவனும், 13 பேர் காயமடைந்தும் உள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version