Site icon Tamil News

இலங்கை: சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பில் வெளியான தகவல்

நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி இந்தியா,பிரித்தானியா, ஜேர்மனி, சீனா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையே அதிகரித்து வருகின்றது.

இம் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Exit mobile version