Site icon Tamil News

விலங்குகள் அல்லது விலங்குப் பொருட்களை இறக்குமதி செய்வது குறித்து இலங்கை முக்கிய முடிவு

பறவைக் காய்ச்சல் பதிவாகியுள்ள எந்தவொரு நாட்டிலிருந்தும் விலங்குகள் அல்லது விலங்குப் பொருட்களை இலங்கைக்கு இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

பல நாடுகளில் மீண்டும் தலைதூக்கியுள்ள பறவைக் காய்ச்சல் நோய்க்கிருமி நுண்ணுயிர் நுழைவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்ந்தும் அமுல்படுத்தப்படும் என அந்தத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

உலகில் முதன்முறையாக பசுக் காய்ச்சல் அமெரிக்காவில் கால்நடைகள் தொடர்பாக பதிவாகியுள்ளதாகவும், எனவே இது மிகவும் மோசமான நிலைமை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கையில் நோய் கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஏற்கனவே இருந்ததைப் போன்று மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எனவே தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த தேவையில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

Exit mobile version