Site icon Tamil News

டுபாயில் இருந்து பணத்தை வாரியிறைக்கும் போதைப் பொருள் வியாபாரிகள்!! அவதூறு பிரச்சாரம் முன்னெடுப்பு

டுபாயில் மறைந்திருக்கும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையை சீர்குலைக்கும் வகையில் பாரிய அவதூறு பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, சமூக வலைதளங்கள், இணையதளங்கள், யூடியூப் சேனல்கள் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களில் பல கோடி ரூபாய் செலவு செய்து இந்த பிரசாரங்களை மேற்கொண்டு வருவது தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் வியாபாரிகள் கைது செய்யப்பட்டதன் மூலம் வர்த்தக வலையமைப்பு முடங்கியுள்ளமையினால் இந்த பாரியளவிலான கடத்தல்காரர்கள் பணத்தை செலவழித்து அவதூறு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சில பிரபலங்கள், சட்டத்தரணிகள், சிவில் ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கூட இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக வெளிப்படுத்தியுள்ளன.

Exit mobile version