Site icon Tamil News

இலங்கை தேர்தல் களம் – மகிந்தவின் அடிச்சுவற்றை பின்பற்றும் நாமல் : தமிழர்களுக்கு தீர்வில்லையாம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வது தமது பொறுப்பு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பேலியகொட வித்யாலங்கார பிரிவேனாவிற்கு இன்று (19.08) வந்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது ஊடகவியலாளர் ஒருவர்  தமிழ் முஸ்லிம் வாக்குகள் இல்லாமல் உங்களால் வெற்றி பெற முடியுமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு பதிலளித்துள்ள நாமல்,  “மற்ற அரசியல் கட்சிகளைப் போல, தேர்தல் நேரத்தில் ஆதாயம் பெறுவதற்காக நாங்கள் எங்கள் கொள்கைகளை மாற்றுவதில்லை.

பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்க முடியாது. இல்லையேல் வடக்கு கிழக்கை இணைக்க முடியாது. இந்த நாட்டை பிரிக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version