Site icon Tamil News

வவுனியாவில் துப்பாக்கிச்சூடு -ஒருவர் பலி!

வவுனியா வடக்கில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெடுங்கேணி பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் இன்று (21.07) இடம்பெற்றுள்ளது.

வவுனியா வடக்கு, பட்டிக்குடியிருப்பு பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மீது இடியன் துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதில், அப்பகுதியைச் சேர்ந்த அழகையா மகேஸ்வரன் என்ற 58 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version