Site icon Tamil News

டீசலை கொள்வனவு செய்ய இலங்கை அமைச்சரவை ஒப்புதல்!

அடுத்த 4 மாதங்களுக்கு தேவையான டீசல் கப்பல்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு 2024 நவம்பர் 1 முதல் பெப்ரவரி 29 ஆம் திகதிவரையான  காலப்பகுதிக்கு 4 டீசல் கப்பல்களை கொள்வனவு செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்த முறையின் கீழ் விலைமனு கோரப்பட்டுள்ளது.

அதன்படி, அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட சிறப்பு நிலை கொள்முதல் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், பெட்ரோசினா இன்டர்நேஷனல் (சிங்கப்பூர்) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் கொள்முதல் செய்ய எரிசக்தி அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Exit mobile version