Site icon Tamil News

இலங்கை அதுருகிரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: சந்தேகநபர்கள் பரபரப்பு வாக்குமூலம் (Video)

அதுருகிரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில் கடுவெல நீதவான் நீதிமன்றத்திற்கு அருகாமையிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு தொடர்பாக பச்சை குத்தும் கடையின் உரிமையாளர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், துபாயில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் ‘லோகு பாட்டி’ என்ற பாதாள உலக நபரிடம் கடையைத் திறப்பதற்காக பணம் பெற்றதாக பச்சைக் கடை உரிமையாளர் துலான் சஞ்சுலா பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடை திறப்பு விழாவிற்கு பாடகர் கே. சுஜீவாவை அழைக்க திட்டமிட்டதாகவும், ‘கிளப் வசந்தா’ என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவை அழைக்குமாறு ‘லோகு பாட்டி’ வற்புறுத்தியதாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

இருப்பினும், கிளப் வசந்தா ஏன் அழைக்கப்பட வேண்டும் என்பதை ‘லோகு பாட்டி’ வெளியிடவில்லை என்று அவர் கூறினார்.

‘லோகு பாட்டி’ மற்றும் ‘கோனா கோவிலே சாந்தா’ ஆகியோர் கிளப் வசந்தாவைக் கொல்லும் நடவடிக்கையைத் திட்டமிட்டனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

பொலிஸாரின் விசாரணையில் சுமார் ரூ. துபாயில் இருந்து டாட்டூ பச்சைகுத்தும் நிலையத்தின்உரிமையாளரின் கணக்கில் 1.6 மில்லியன் பணம் மாற்றப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Exit mobile version