Site icon Tamil News

இலங்கை: பேராயர் மல்கம் ரஞ்சித்தை சந்தித்த அனுரகுமார திஸாநாயக்க

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க இன்று (17) பிற்பகல் பொரளையில் உள்ள பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பேராயர் மல்கம் ரஞ்சித்தை சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது, ​​பேராயர், கொழும்பு உதவி ஆயர் மக்ஸ்வெல் சில்வா, தந்தை அந்தோனி, மற்றும் தந்தை சிறில் காமினி ஆகியோருடன் பல்வேறு விடயங்கள் குறித்து திஸாநாயக்கவுடன் கலந்துரையாடியதுடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவரது வெற்றிக்கு ஆசீர்வாதங்களையும் வழங்கினார்.

NPPயின் செயற்குழு உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தும் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

Exit mobile version