கொழும்பில் இன்று மற்றும் நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
76வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று மற்றும் நாளை கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி நிஹால் தல்துவ மற்றும் போக்குவரத்துப் பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹபுகொட ஆகியோர் இதனை விளக்கினர்.