Site icon Tamil News

இலங்கையில் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்களுக்கு விசேட அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க செல்லுபடியாகும் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் தற்காலிக வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் தற்காலிக வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

தங்கள் பகுதியில் உள்ள கிராம அலுவலர் அல்லது தோட்ட கண்காணிப்பாளர் மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Exit mobile version