Site icon Tamil News

கொஹுவல சந்தி வழியாக செல்லும் வாகன சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு

கொஹுவல மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் காரணமாக மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வாகன சாரதிகளுக்கு இலங்கை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

ஜூலை 31 ஆம் திகதி வரை கொஹுவல சந்திக்கு அண்மித்த வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜூலை 31ஆம் திகதியுடன் முடிவடையவிருந்த மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஜூலை 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை (ஆர்டிஏ) தெரிவித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, கொஹுவளை சந்திக்கு அண்மித்த போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வாகன சாரதிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Exit mobile version