Site icon Tamil News

புத்தாண்டின் போது வாகன சாரதிகளுக்கு பொலிஸாரின் விசேட அறிவிப்பு

பண்டிகை கால தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களுடன் நகரங்களுக்கு வரும்போது சாரதிகள் தங்களது வாகனங்களை அவதானத்துடன் செலுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏனென்றால், இந்த நாட்களில் கார் திருட்டு கும்பல் புறநகர்ப் பகுதிகளில் சுற்றித் திரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, நகரில் எங்கு வாகனங்களை நிறுத்தினாலும் பூட்டுமாறு சாரதிகளிடம் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தனியார் வாகனங்களை நிறுத்துமாறு சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Exit mobile version