Site icon Tamil News

ISIS குறித்து விசாரணை நடத்த விசேட குழு நியமனம் – தேசபந்து தென்னகோன்

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபர்கள் நாட்டில் தங்கியிருக்கிறார்களா என்பதை கண்டறிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தற்போது உடனடி விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸ் மா அதிபர் தென்னகோன் தெரிவித்துள்ளார்.

கடுவெலவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தென்னகோன், குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் மேற்பார்வையில் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவு, புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், விசேட அதிரடிப் படையினர் உள்ளிட்ட புதிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது எனா தெரிவித்தார்.

“தினசரி முன்னேற்றம் குறித்து ஒவ்வொரு நாளும் குழுவுடன் நான் விவாதித்து, அவர்களுக்கு தேவையான வழிமுறைகளை வழங்குகிறேன். இந்த விவகாரம் தொடர்பாக வெற்றிகரமாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணையின் முன்னேற்றம் குறித்து எதிர்காலத்தில் உங்களுக்குத் தெரிவிப்போம்” என்று அவர் மேலும் கூறினார்.

Exit mobile version