Site icon Tamil News

வடகொரியாவின் மோசமான செற்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள தென் கொரிய மக்கள் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

வடகொரியாவில் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் தென்கொரியாவிற்குள் அடித்து செல்லப்படலாம் என தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

வட கொரியா சமீபத்தில் பல்லாயிரக்கணக்கான கூடுதலான கொடிய வெடிபொருட்களை எல்லை பகுதியில் புதைத்து வைத்துள்ளது.

வட கொரியா தனது முன்னணி பாதுகாப்பு நிலையை உயர்த்துவதையும், அதன் வீரர்கள் மற்றும் குடிமக்கள் தென் கொரியாவுக்குத் திரும்புவதைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கையை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது பெய்து வரும் மழையினால் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இது எல்லையில் புதைக்கப்பட்ட வெடி பொருட்களை தென்கொரியாவிற்குள் கொண்டுவரக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது வட கொரிய ஆத்திரமூட்டல் பற்றிய கவலைகள் ஆழமடைந்துள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Exit mobile version