Site icon Tamil News

வடகொரியாவுக்கு அமெரிக்காவுடன் இணைந்து பதிலடி கொடுக்க தயாராகும் தென்கொரியா

அமெரிக்க மற்றும் தென்கொரியப் படைகள் இணைந்து, 10 நாள் கூட்டு ராணுவப் பயிற்சியைத் தொடங்கியுள்ளன.

வடகொரியாவின் அணு ஆயுதத் தயாரிப்பு மற்றும் சைபர் தாக்குதல் மிரட்டல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 29ம் திகதி வரை நடைபெற உள்ள கூட்டு ராணுவப் பயிற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தென்கொரிய ஜனாதிபதி அலுவலகம் முன், ஒரு தரப்பினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இந்த நிலையில், போர் ஒத்திகை போன்ற இந்த கூட்டுப் பயிற்சியை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Exit mobile version