Site icon Tamil News

உலகின் பல நாடுகளை அச்சுறுதுத்தும் பனிப்பொழிவு! கடுமையாக பாதிக்கப்பட்ட ரஷ்யா – சீனா

உலகின் பல நாடுகளை பனிப்பொழிவு அச்சுறுதுத்தும் நிலையில் ரஷ்யா மற்றும் சீனா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நாட்களில் சீனாவில் கடுமையான குளிரான காலநிலை நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல பகுதிகளில் வீதிகளில் பனிக்கட்டிகள் குவிந்ததால் வாகனங்கள் விபத்துக்குள்ளானதை அடுத்து, பல மாகாணங்களில் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்தை அதிகாரிகள் கட்டுப்படுத்தினர்.

இதற்கிடையில், ரஷ்யா முழுவதும் கடுமையான பனிப்புயல் வீசியது, பல தசாப்தங்களுக்குப் பிறகு, ரஷ்யாவில் மிகப்பெரிய பனிப்பொழிவைப் பெற்றுள்ளது.

மொஸ்கோவில் உள்ள சாலைகள் 20 சென்டிமீட்டருக்கும் அதிகமான அடர்த்தியான பனியால் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

60 ஆண்டுகளுக்குப் பிறகு மாஸ்கோவைத் தாக்கும் வலுவான பனிப்புயல் இது என்று கூறப்படுகிறது.

Exit mobile version