யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள இசை நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தென்னிந்திய பிரபலங்கள் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக வந்துள்ளனர்.
நேற்று மதியம் அவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 05 மணிக்கு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே தென்னிந்திய பிரபல கலைஞர்கள் யாழ்ப்பாணம் வந்துள்ளனர்.
சாம் விஷால், ஸ்ரீதர் சேனா, மானசி, ஹரிப்ரியா, மூக்குத்தி முருகன், குரேஷி உள்ளிட்டவர்கள் யாழ்ப்பாணம் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.