Site icon Tamil News

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி வெற்றிடம்: கட்சி எடுத்துள்ள தீர்மானம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பதவியை வெற்றிடமாக வைக்க கட்சி தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தனது புதிய அலுவலகப் பொறுப்பாளர்களை இன்று நியமித்துள்ளது.

தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கூடிய கட்சியின் செயற்குழு இந்த தீர்மானங்களை எடுத்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் மீண்டும் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், கட்சியின் புதிய பொருளாளராக பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் தலைவராக வண. உத்துராவல தம்மரதன தேரர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version