இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று (31.07) தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
ஹொரோவ்பதான பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் ஒருவரை சில குழுவினர் கடத்திச் சென்று தாக்கியுள்ளனர். இவ்வாறான நடவடிக்கைகளை தடுக்கக் கோரியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி தம்புள்ளை, கெக்கிராவ, பொலன்னறுவை, கெபதிகொல்லாவ, அனுராதபுரம், ஹொரோவ்பதான, திருகோணமலை ஆகிய பகுதிகளில் பணிப் பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்கூட்டியே அறிவிக்கமால் திடீரென மேற்கொண்ட இந்த பணிப்புறக்கணிப்பினால், பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.