Site icon Tamil News

சிவயோகபதி கௌதமனின் பூதவுடல் யாழில் அஞ்சலிக்காக வைப்பு

அவித்தாவ ஒலகந்த எத்தாவெட்டுனுவல பகுதியில் நீராட சென்ற பொது சுகாதார பரிசோதகர் சிவயோகபதி கௌதமனின் பூதவுடல் இறுதி கிரியைகளுக்காக அச்சுவேலி பத்தமேனியிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள குறித்த இளைஞன் மொரட்டுவ பிரதேசத்தில் பொது சுகாதார பரிசோதராக கடந்த ஐந்து வருடங்களாக கடமையாற்றியுள்ளார்.

டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் குழுவினர் மற்றும் நான்கு பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவொன்று குளத்தில் நீராடச் சென்ற போதே இவ்வனர்த்தத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மொரட்டுவை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமையாற்றிய எஸ். கௌதம் (வயது -26) மற்றும் எஸ். ஹர்ஷநாத் (வயது -28) ஆகிய இரு பொது சுகாதார உத்தியோகத்தர்களே இவ்வாறு உயிரிழந்தனர்.

இவர்களில் எஸ். ஹர்ஷநாத் (வயது -28) மட்டக்களப்பை சொந்த இடமாகக் கொண்டவர்.

இதில் எஸ்.கெளதம் அச்சுவேலி பத்தமேனியை சேர்ந்தவர்.

அச்சுவேலி இளைஞனின் பூதவுடல் இன்று மதியம் ஒரு மணியளவில் பத்த மேனி தீத்தாங்குளம் இந்துமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

Exit mobile version